இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தாமோதரன் மற்றும் பிரபு ஆகிய இருவரும் தங்கள் வீட்டின் அருகே நின்றிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர், ‘‘நீங்கள்தானே சண்டை போட்ட எங்களை எச்சரித்தது’’, என்று கூறி தாமோதரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுத்த பிரபுவுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவேக், முரளி மற்றும் முருகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
The post சண்டையை தடுத்தவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.