அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது நடவடிக்கை பற்றி கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று கூட சொல்ல முடியாது. இது கொடுங்கோல் ஆட்சி முறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை மத்திய அரசு செய்யும். தன்னிச்சையாக செயல்படவேண்டிய அமைப்புகள் ஒன்றிய அரசின் 5 விரல்கள் போல செயல்படுகின்றன என அமலாக்கத்துறையை விமர்சித்த சீமான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வாழ்த்துகள் என தெரிவித்தார்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. ஒன்றிய அரசின் கொடுங்கோல் ஆட்சி.. அப்பட்டமான அடக்குமுறை.: சீமான் கண்டனம்.! appeared first on Dinakaran.