கலெக்டர் உத்தரவு தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணி

வேதாரண்யம்,ஜூன்14: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி இயக்கம் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் பேருந்து நிலையம், பள்ளிகளின் சுற்று வட்டார பகுதிகள் குடிநீர் தொட்டியில் உள்ள பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவைகளை தலைஞாயிறு பேரூராட்சி தூய்மை பணி ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோர் அகற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார், தூய்மை பணியாளர் மேஸ்திரி அகிலா, பேரூராட்சி உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் உத்தரவு தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: