ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குப்வாரா மாவட்டம் டொபனர் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தனரா? அல்லது உள்ளூர் பயங்கரவாதிகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.

Related Stories: