ஜெகதீசன் தொடர்ந்து பயணச்சீட்டு எடுக்கச் சொன்னதால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து ஜெகதீசன் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ஜெகதீசனுக்கு கழுத்து மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறி கூச்சலிட்டனர். இதனால், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து அந்த வாலிபர் தப்பியோடினார். பேருந்தில் இருந்த பயணிகள், படுகாயமடைந்த ஜெகதீசனை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
The post டிக்கெட் எடுக்க சொன்னதால் மாநகர பஸ் நடத்துனரின் கழுத்தை அறுத்த வாலிபர்: மூலக்கொத்தளத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.