இதையடுத்து கிறிஸ்டோபர் விவரங்கள் கேட்டபோது தனது பெயர் ஆரோக்கிய யோகேஷ் (24) என்றும் தங்குவதற்கு வீடு எதுவும் இல்லை’ என்றும் அந்த நபர் கூறியதையடுத்து கிறிஸ்டோபர், அந்த நபரை தனது அறைக்கு அழைத்து சென்று தங்கவைத்ததுடன் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், கிறிஸ்டோபர் குளித்துவிட்டு வெளியே வந்தபோது வீட்டில் இருந்த இரண்டு செல்போன்கள், 3500 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த நபர் ஓடிவிட்டார் என்று தெரிந்தது.இதுகுறித்து கிறிஸ்டோபர் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கிறிஸ்டோபரின் இரண்டு செல்போன்களை எடுத்துச்சென்ற ஆரோக்கிய யோகேஷ் தனது செல்போனை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டது தெரிந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து ஆரோக்கிய யோகேஷை கைது செய்து விசாரித்தனர்.
இதில் தெரியவந்துள்ளதாவது; கோயம்பேடு பகுதியில் இருந்து ஆரோக்கியயோகேஷை அழைத்துச்சென்ற கிறிஸ்டோபர் தனது வீட்டில் வைத்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கிய யோகேஷ் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அவரை விடவில்லை என்று தெரிகிறது. இதனால் கிறிஸ்டோபர் குளிக்க சென்றபோது ஆரோக்கிய யோகேஷின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால் கிறிஸ்டோபரின் இரண்டு செல்போன்கள், பணத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கிய யோகேஷ் ஓடிவிட்டார். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆரோக்கிய யோகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச்சென்று வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர்: கொடுங்கையூரில் பரபரப்பு appeared first on Dinakaran.