திண்டுக்கல்லில் டேக்வாண்டோ போட்டி

திண்டுக்கல், ஜூன் 12: திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் 18வது மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு மாவட்ட தலைவர் சாரங்க பிரபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்க சேர்மன் கமல்ஹாசன், தலைமை புரவலர் ஷர்மிளா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

11, 14, 17, மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எடை பிரிவு அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற போட்டியில், 124 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் திருவாரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் திண்டுக்கல் அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலாளர் ஜோதி பாசு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில், இணைச் செயலாளர் நித்தியா, அமைப்பு குழு செயலாளர் முத்தையா, துணைச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் டேக்வாண்டோ போட்டி appeared first on Dinakaran.

Related Stories: