ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்கள் நடக்கின்றன. 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். அவர்கள் கை, கால்கள் சேதமடைகின்றன. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தி வந்தாலும் கூட, விபத்தால் ஏற்படும் கரும்புள்ளிகளை நினைத்து வருந்துகிறேன். சாலை விதிகள் குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்களின் மனம் மாறாத வரை, சாலை விபத்துகளை குறைக்க முடியாது. விபத்தில் சிக்குபவர்களில் 60 சதவீதமானவர்கள் 20 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். எனவே அரசுடன் சேர்ந்து ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க முடியும்’ என்றார்.
The post நாட்டின் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் என்னால் மக்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை!: நிதின் கட்கரி வருத்தம் appeared first on Dinakaran.