மயிலம் சந்தை பகுதியில் குழந்தை தொழிலாளி மீட்பு கடை உரிமையாளர் மீது வழக்கு

 

திருச்சி, ஜூன் 10: திருச்சி மயிலம் சந்தை பகுதியில் கடையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளர் சிறுவனை தொழிலாளர் துறை அதிகாரிகள் மீட்டு, கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி மயிலம் சந்தை பகுதியில் தொழிலாளர்துறை எஸ்.ஐ ராஜேந்திரன் நேற்றுமுன்தினம் மாலை அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடையில் தென்னூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் வேலை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையனைடுத்து சிறுவனை மீட்டு, காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தொழிலாளர் துறை எஸ்.ஐ ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், கடை உரிமையாளர் முகமது உசேன் (47) என்பவர்மீது வழக்கு பதிந்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயிலம் சந்தை பகுதியில் குழந்தை தொழிலாளி மீட்பு கடை உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: