வேடசந்தூர் அருகே கார் மோதி டிரைவர் பலி: பழுதான லாரி பக்கத்தில் நின்ற போது விபத்து

 

வேடசந்தூர், ஜூன் 10: திருச்செந்தூரில் இருந்து பெங்களூருக்கு நுங்குகளை ஏற்றி கொண்டு நேற்று லாரி ஒன்று சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம், நம்மாண்டலி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (28) ஓட்டி வந்தார். வேடசந்தூர் அருகேயுள்ள விருதலைப்பட்டி மேம்பாலத்தில் வந்த போது திடீரென லாரியின் இன்ஜின் பழுதாகி நின்றது. இதையடுத்து டிரைவர் கனகராஜ், மெக்கானிக்கை வரவழைத்து லாரியை பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சேலத்தை நோக்கி வந்த கார், லாரியின் மீது அமர்ந்திருந்த கனகராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். தகவலறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து எஸ்எஸ்ஐ சந்திரசேகர், கூம்பூர் எஸ்எஸ்ஐ சிவா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், எருமைபாளையம், கலரம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேடசந்தூர் அருகே கார் மோதி டிரைவர் பலி: பழுதான லாரி பக்கத்தில் நின்ற போது விபத்து appeared first on Dinakaran.

Related Stories: