வேன் மோதி மூதாட்டி பலி

 

திருப்பூர், ஜூன் 10: திருப்பூர் அருகே கோதபாளையம் செம்மாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், நேற்று தனது பைக்கில் தாய் சுப்பாள் (60). மற்றும் சிறுமியுடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது ரோட்டோரம் மாநகராட்சியின் குப்பை அள்ளும் வேன் பழுதடைந்து நின்றது. வேன் டிரைவர் பாலமுருகன், கதவை திறந்த போது இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில், கீழே விழுந்த சுப்பாள் மீது பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து தெற்கு போலீசார் குப்பை அள்ளும் வேன் டிரைவரான பாலமுருகன், பின்னால் வந்த வேன் டிரைவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வேன் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: