குடும்பத் தகராறில் சகோதரியின் கணவரை தாக்கிய வாலிபர்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள விடையூர் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் மனைவி உஷா(40). இவர்களது மகன் சூர்யா(20). உஷாவுக்கும், அவரது மகன் சூர்யாவுக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிற்கு வந்த உஷாவின் மருமகன் வேலு(32), ஏன் அம்மாவிடம் சண்டை போடுகிறாய் என சூர்யாவிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, அக்காவின் கணவர் என்றும் பார்க்காமல் தகாத வார்த்தைகளால் பேசி, உருட்டுக் கட்டையால் வேலுவை தாக்கியுள்ளார்.

மேலும் இதில் தலையிட்டால் உன்னை சாகடித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மருமகன் வேலுவை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த உஷா, இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகன் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உஷா தெரிவித்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சூர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடும்பத் தகராறில் சகோதரியின் கணவரை தாக்கிய வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: