கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை போட வேண்டுமென கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் சிரமம் நீடித்து வருகிறது. எனவே கிழவன் கோவில்-பெரியாறு அணை இடையே புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமமக்கள் கூறுகையில், கிழவன்கோவில்-பெரியாறு அணை இடையே உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. நடந்துகூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக உள்ளது. கிராமமக்கள் பெரும்பாலும் டூவீலர், சைக்கிளைதான் பயன்படுத்தி செல்கிறோம். அதுவும் சில நேரங்களில் டயர் பஞ்சராகிவிடுகிறது. எனவே சிரமத்தை போக்கும் வகையில் விரைவில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.
The post சேதமடைந்து ஜல்லிக்கற்கள் நீட்டிக்கொண்டிருக்கிறது: கிழவன்கோவில் சாலை பதம்பார்க்குது காலை.! புதிதாக அமைக்க கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.