ஏக்கருக்கு 1.80 லட்சம் செலவு செய்து விளைவிக்கப்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் மட்டுமின்றி நெற்பயிர்கள், சவுக்கு மரம், பலா மரம், பூச்செடிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால் படித்து வேலையின்றி உள்ள முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தற்போது மழை மற்றும் காற்றால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாது அவர்கள் திகைத்து வருகின்றனர்.
The post புதுக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை: 500 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.