அரவக்குறிச்சி பகுதியில் தொடங்கியது சீசன்; கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் முருங்கைக்காய்கள்

அரவக்குறிச்சி,ஜூன்7:அரவக்குறிச்சி பகுதியில் தற்போதைய சீசனுக்காக தோட்டங்களில்முருங்கை மரங்களில் காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றது. முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்,
அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காயிக்கு தனி மெளசு உள்ளது.

ஆகையால் அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி
வைப்பார்கள். இந்நிலையில் கடந்த மாதங்களில் முருங்கை மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. தற்போது இம்மாதம் இறுதியில் சீசனுக்காக அறுவடை செய்ய அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை தோட்டங்களில் அதிக அளவில் முருங்கைகாய் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றது. தற்போது விவசாயிகள் முருங்காய் அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர்.

சென்ற மாதங்களில் முருங்கை கிலோ ரூ. 3 க்குத்தான் விற்றது. ஆனால் தற்போது தரமான காய்கள் விளைச்சல் அதிகரித்து மொத்த சந்தைக்கு வருகின்றது. இதனால் கிலோ ரூ.3க்கு விற்ற முருங்கை தற்போது கிலோ ரூ.30க்கு மேல் விற்பனையாகின்றது. இதையடுத்து முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post அரவக்குறிச்சி பகுதியில் தொடங்கியது சீசன்; கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் முருங்கைக்காய்கள் appeared first on Dinakaran.

Related Stories: