அமுல் மூலம் ஆவினை அழிக்க அமித் ஷா சதி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு

விருதுநகர்: குஜராத்தின் அமுல் மூலம் தமிழ்நாட்டின் ஆவினை காலி செய்ய அமித்ஷா சதி செய்வதாக, மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்பி நேற்று அளித்த பேட்டி:
வெளிநாடுகளுக்கு செல்வதால் மாநிலங்களுக்கு நன்மை கிடைக்காது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார். அவர், பிரதமர் மோடியை குற்றம் சொல்கிறார் என நினைக்கிறேன். பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரே கிடையாது. போகாத நாடே கிடையாது. மோடி வெளிநாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் கேட்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஆவினை மேம்படுத்த புதிய அமைச்சராக தேர்வு செய்த மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆவினில் சீர்கேடு நிலவி வர அதிமுக அரசே காரணம். குஜராத்தின் அமுல் மூலம் ஆவினை காலி செய்வதற்கும், உண்மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜ அமைச்சர் அமித்ஷாவின் சதித் திட்டம் நடைபெறுகிறது. ஆவின் பிரச்னைகளின் பின்னணியில் பாஜவினருக்கு பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருகிறது. பாஜவின் அடிமைகளாகவே அதிமுகவினர் உள்ளனர். கரைந்து வரும் கப்பலாகவும், உடைந்த மண் பாத்திரமாகவும் உள்ள அதிமுகவின் இறுதி காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அமுல் மூலம் ஆவினை அழிக்க அமித் ஷா சதி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: