வத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு மீண்டும் வேகத்தடை

 

வத்தலக்குண்டு, ஜூன் 7: வத்தலக்குண்டுவில் தமிழக ஆளுநர் வருகையையொட்டி பள்ளிகள் முன்பு நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. அவற்றை பள்ளி திறக்கும் முன்பு மீண்டும் அமைக்க வேண்டும் என கடந்த ஜூன் 2ம் தேதி தினகரனி் படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறையினர் மதுரை சாலையில் காளியம்மன் கோயில் அருகே ஒரு தனியார் பள்ளி முன்பு அகற்றப்பட்டிருந்த வேகத்தடையையும், மதுரை சாலையில் சிஎஸ்ஐ தேவாலயம் அருகே பள்ளியின் முன்பு அகற்றப்பட்டிருந்த வேகத்தடையையும் மீண்டும் அமைத்தனர். பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் வேகத்தடை அமைத்து கொடுத்த வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரை மாறன் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post வத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு மீண்டும் வேகத்தடை appeared first on Dinakaran.

Related Stories: