கஞ்சா விற்ற இளம்பெண் குண்டர் சட்டத்தில் கைது

 

திருப்பூர், ஜூன் 7: திருப்பூர், காங்கயம் ரோடு, பூலவாரி சுகுமாரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி சகுந்தலா (36). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் சகுந்தலா கஞ்சா விற்பனை செய்ததாக தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சகுந்தலா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, சகுந்தலாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் இருக்கும் சகுந்தலாவிடம் போலீசார் நேற்று வழங்கினார்.

The post கஞ்சா விற்ற இளம்பெண் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: