வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை!

சென்னை: வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கிமீ தொலைவுக்கு 4 வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டின் மத்திய பட்ஜெட்டில் ரூ. 96.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை விரைவில் தொடங்க முடிவெடுத்த ரயில்வே நிர்வாகம் சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சென்னை கடற்கரை- சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு வேளச்சேரி முதல் சேப்பாக்கம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ரயில் இயக்கத்தை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை நீட்டிப்பு செய்வது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: