டூவீலர் திருட்டு

 

சிவகாசி, ஜூன் 6: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தியிருந்த டூவீலரை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் குருசாமியின் மகன் காளிராஜ்(30). இவர் சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜவுளி கடையில் முன்பு தனது டூவீலரை நிறுத்தி விட்டு ஜவுளி எடுக்க சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை. இது குறித்து காளிராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, டூவீலரை திருடிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

The post டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: