பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நள்ளிரவில் காதலி வீட்டிற்கு சென்ற வாலிபர் குத்திக்கொலை: தாய்மாமன் கைது

மதுக்கரை: காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரசாந்த் (21). தனியார் நிறுவன ஊழியர். இவரும் செட்டிபாளையத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். இதுபற்றி தெரிந்ததும் இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதன்பின் காதல்ஜோடி நேரிலும், போனிலும் பேசி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண்ணுக்கு நேற்று (திங்கட்கிழமை) பிறந்தநாள்.

காதலிக்கு முதல் வாழ்த்து தனதாக இருக்க வேண்டும் என்று நினைத்த பிரசாந்த், நண்பர்களான தரணி பிரசாத், குணசேகரன் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் பைக்கில் நேற்று முன்தினம் இரவு காதலி வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு சரியாக 12 மணிக்கு காதலியின் வீட்டுக்கதவை தட்டினார். அப்போது பெண்ணின் தந்தை மகாதேவன் (40), தாய்மாமன் விக்னேஷ் (29) ஆகியோர் கதவை திறந்தனர். வெளியில் பிரசாந்த் போதையில் நின்றது தெரியவந்தது. இதனால் பிரசாந்துக்கும், விக்னேசுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரம் அடைந்த விக்னேஷ் கத்தியால் அவரது கை மற்றும் நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடன் சென்ற நண்பர்கள் அவரை மீட்டு பைக்கில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விக்னேசை கைது செய்தனர்.

The post பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நள்ளிரவில் காதலி வீட்டிற்கு சென்ற வாலிபர் குத்திக்கொலை: தாய்மாமன் கைது appeared first on Dinakaran.

Related Stories: