மகள் இறப்பில் சந்தேகம்: தந்தை போலீசில் புகார்

 

சின்னசேலம், ஜூன் 5: சின்னசேலம் அருகே பெரியசெருவத்தூர் காட்டுகொட்டாயை சேர்ந்த சின்னதம்பி மகன் திருநாவுக்கரசு(24). இவருக்கும் கடலூர் மாவட்டம் கோணாங்குப்பத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு முனுஷ்னி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருநாவுக்கரசு கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதனால் மகாலட்சுமி மாமனார், மாமியாருடன் பெரியசெருவத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமி இரவு 1 மணியளவில் சேலையில் தூக்குபோட்டு இறந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜமாணிக்கம் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகள் இறப்பில் சந்தேகம்: தந்தை போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: