கொள்ளிடம் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமம் சின்னதெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவருக்கு சொந்தமான கூரைவீடு வீட்டிற்குள் இருந்த மின் வயரிலிருந்து ஏற்பட்ட மின்கசிவால் தீப்பொறி கூறையில் பட்டு வீட்டின் மேற்கூரை பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் வீட்டுக்குள் வைத்திருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின. இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

The post கொள்ளிடம் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.

Related Stories: