கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் அருகே பொன்மாந்துரை நல்லேந்திரபுரத்தை சேர்ந்தவர் கவுதம புத்தர் (18). இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. நேற்று காலை வீட்டருகே உள்ள கிணற்றில் கவுதம புத்தர் சடலமாக மிதந்தார். தகவலறிந்ததும் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் வந்து உடலை மீட்டனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: