ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ராட்சத கிறேன் மூலம் ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை வரட்டும் ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம்.  மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் இது நடந்தது. தற்போது மீட்பு பணிகளில் கவனம் செலுத்துகிறோம். விபத்து நடந்த இடத்தில் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளை அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறார்.

The post ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: