ஒடிசா அருகே விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வந்த 137 தமிழக பயணிகளில் 8 பேர் காயம்: அமைச்சர் தகவல்

சென்னை: கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபதியில் சிக்கிய தமிழர்களை மீட்க அமைச்சர் குழு ஒடிசா விரிந்துள்ளது. சிறப்பு ரயில்கள் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமிழகம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் நடைமேடை 11-ஐ வந்தடைந்தது. சிறப்பு ரயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளிடம் நலம் விசாரித்தனர். ஒடிசாவின் பத்ராக் – சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் தமிழக பயணிகள் 137 பேர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்டவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம்:
ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்து 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டவுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தீவிர சிகிச்ச்சைகான பெரிய பாதிப்புகள் இல்லை.

305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை” என்று அவர் கூறினார்.

The post ஒடிசா அருகே விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வந்த 137 தமிழக பயணிகளில் 8 பேர் காயம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: