பாளையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது

நெல்லை, ஜூன் 4: பாளை திம்மராஜபுரத்தில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாளை திம்மராஜபுரம் மணிக்கூண்டு அருகே வாலிபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பாளை போலீசார் அங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த படப்பக்குறிச்சி சொக்கநாத அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொம்பையா மகன் முத்துராஜ் (27) என்பவரை பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த நாலரை லிட்டர் ச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முத்துராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம், பேட்மாநகரைச் சேர்ந்த உறவினர் ஆறுமுகம் என்பவர் கள்ளச்சாராயம் சப்ளை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பாளையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: