தருவைகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

குளத்தூர், ஜுன் 4: தருவைகுளம் புனிதஅந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. குளத்தூரையடுத்த தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை பாதுகாவலர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன்அந்தோணி தலைமையில் கொடியேற்றி மறையுரை வழங்கப்பட்டது. திருவிழா பத்துநாட்களும் பங்குதந்தைகள் வினித், ராயப்பன், தாமஸ்மெடரிக் பள்ளி தாளாளர் அமலன், குழந்தைராஜன், மரியஅரசு, இனிகோஇறையரசு, மரியதாஸ், அந்தோணிமிக்கேல்லாரன்ஸ், பென்சிகர், நெல்சன், விஷால், பன்னீர்செல்வம், ஜோசப்ஸ்டாலின் ஆகியோர் மறையுரை, நற்கருனை ஆசிர்வாதம், திருப்பலிகளை வழங்கவுள்ளனர். ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், வேதியர் மார்ட்டின் மற்றும் ஆலய கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post தருவைகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: