புதுக்கோட்டை: தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை தபால் நிலையத்திற்குள் செல்லாதவாறு போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசார்-போராட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
The post பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாஜ எம்பியை கைது செய்யக்கோரி தபால் நிலையங்கள் முற்றுகை: பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது appeared first on Dinakaran.