மாற்று திறனாளியை கத்தியால் குத்தியவர் 5 ஆண்டுக்கு பின் கைது

வேதாரண்யம், ஜூன் 2:நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சக்திவேல் (24). இவர் கடந்த 2018ம் ஆண்டு புஷ்பவனத்தில் மாற்றுத்திறனாளி மாரியப்பனை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். மாரியப்பனின் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சக்திவேல் கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவிற்கு சென்று தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் வேதாரண்யம் சரக டி.எஸ்.பி சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் போலீசாருக்கு சக்திவேல் புஷ்பவனம் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று காலை அங்கு சென்று சக்திவேலை கைது செய்தனர். மேலும், வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகை கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

The post மாற்று திறனாளியை கத்தியால் குத்தியவர் 5 ஆண்டுக்கு பின் கைது appeared first on Dinakaran.

Related Stories: