நாகூர் தர்காவில் தவறவிட்ட லை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு

நாகப்பட்டினம், ஜூன்2: நாகூர் தர்காவில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை கண்டுபிடித்து, உரிய நபரிடம் ஒப்படைத்தவரை யாத்ரீகர்கள் பாராட்டினர். வேலூரை சேர்ந்தவர் கரீம்பாசா. இவர் தனது குடும்பத்துடன் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு நேற்று வருகை தந்தார். அப்போது தனது ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை தர்கா குழுந்த மண்டபம் அருகே தவற விட்டார். அங்கு பணியில் இருந்த தர்கா காவலாளி லாரன்ஸ் தவறவிட்ட செல்போனை கண்டெடுத்தார். அந்த செல்போனை நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக்தாவுத் வசம் ஒப்படைத்தார். இதன்பின்னர் தர்கா காவலாளிகளான ஷாகுல், அய்யப்பன் செல்போன் உரிமையாளரை தொடர்பு கொண்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர். இதை பார்த்த தர்காவிற்கு வந்த யாத்ரீகர்கள் காவலாளிகளை பாராட்டினர்.

The post நாகூர் தர்காவில் தவறவிட்ட லை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: