கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கல்

கொடைக்கானல், ஜூன் 2: கொடைக்கானலில் கோடை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. கோடை விழா நடைபெறும் இடமான பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவடைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.இவர்களுக்கு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா மஞ்சள் பைகளை வழங்கினார். பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் விதமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றுலா இடங்களில் மஞ்சள் பை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: