ஒட்டன்சத்திரம் கல்லூரியில் பணி நிறைவு பாராட்டு விழா

ஒட்டன்சத்திரம், ஜூன் 2: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் இணை ஆணையர், தாளாளர் நடராஜனுக்கு ஒட்டன்சத்திரம் பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. கல்லூரி செயலர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வாசுகி சிறப்புரையாற்றி வாழ்த்து மடலை வழங்கினார். கல்லூரி தாளாளர் நடராஜன் ஏற்புரையாற்றினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் கல்லூரியில் பணி நிறைவு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: