அம்பையில் நகராட்சி கூட்டம்

அம்பை, ஜூன் 2: அம்பாசமுத்திரம் நகராட்சியில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்ட அரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியம் (எ) கேபிள் கண்ணன் முன்னிலை வகித்தனர். நகராட்சி உதவி அலுவலர் குமரேசன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் அம்பாசமுத்திரம் நகராட்சியில் கழிவு நீர் ஓடைகள் பராமரிப்பு, வாறுகால் சீரமைப்பு, பொதுக்கழிப்பறைகள் பராமரிப்பு செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல், நகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அம்பை நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட ராணி ஸ்கூல் பகுதியில் நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டி கிடந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் அனுமதி இன்றி அதிமுக கவுன்சிலர் அப்புறப்படுத்தியது தொடர்பாக நடந்த விவாதத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post அம்பையில் நகராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: