புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்து அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்து அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூந்தமல்லி அடுத்த கொரட்டூர் ஊராட்சி, புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த, இந்த கும்பாபிஷேக நிகழ்வு கடந்த 29ம் தேதி காலை 5 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 7.30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு உற்சவர் கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கந்தபாபு தலைமையில் விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

The post புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்து அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: