இந்நிலையில், அந்த தனியார் தொழிற்சாலையின் மேலாளர் வண்டலூர் லாரா லேக் அவன்யூ பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் (50) மற்றும் அவருடன் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஊத்துக்கோட்டை தாளுக்கா, கன்னிகை பெரு கிராமம் மாரியம்மன் கோயிலை சேர்ந்த பிரவு (33) ஆகிய இருவரையும் காயர் போலீசார் கைது செய்து நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்த ஆபரேட்டர் யுவராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உயிரிழந்த மீராஜ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஹெக்லக் ஆகிய இருவரும் உத்திர பிரதேச மாநிலம் வாரணவாசி மாவட்டம் சவுபியூர் தாலுக்கா சந்திராவதி கிராமத்தை சேர்ந்தவர்கள்.
The post கீரப்பாக்கம் ஊராட்சியில் ராட்சத பாய்லர் வெடித்த விபத்து: மேலும் ஒருவர் பலி: 2 தொழிற்சாலை நிர்வாகிகள் கைது appeared first on Dinakaran.