தொழிலாளி உள்பட இருவருக்கு வெட்டு: 2 பேர் கைது

நெல்லை, ஜூன் 1: வள்ளியூர் அருகே மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (24). கட்டிட தொழிலாளி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர். அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மார்சலும், விகுபாயும் பைக்கில் களக்காடு அடுத்துள்ள ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள சாஸ்தா கோயில் ஆர்ச் அருகே சென்ற போது, பொத்தையடியை சேர்ந்த முத்துக்குமார் மகன் வைகுண்டராஜா, பெருமாள் மகன் மணிகண்டன் சேர்ந்து, மார்சலையும், விகுபாயையும் வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த திருக்குறுங்குடி போலீசார், வைகுண்டராஜா, மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post தொழிலாளி உள்பட இருவருக்கு வெட்டு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: