வனத்தை ஒட்டியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர், ஜூன் 1: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த 2 மாதங்களாக சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, மாநில நெடுஞ்சாலையை கடந்து காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது. இந்த யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் பயிர்களை தின்று விட்டு, மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. பயிர் சேதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த யானை பகல் நேரத்திலும் ஊருக்குள் வருவதால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர். ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கேஜிஎப் வனப்பகுதிக்கு விரட்ட, வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் வனத்துறையினர் புலியரசி, செட்டிபள்ளி, சக்காரலு, கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், வனப்பகுதிக்கு விறகு வெட்டவோ, ஆடு, மாடுகள் மேய்க்கவோ செல்ல வேண்டாம். இரவு நேரத்தில் பயிர்களை காவல் காக்க செல்ல வேண்டாம். தனி வீடுகளோ அல்லது கொட்டகையாக உள்ள இடங்களிலோ இரவு நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post வனத்தை ஒட்டியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: