போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: சென்னையில் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை.!

சென்னை: சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, போக்குவரத்து துறையினர் முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது முதலமைச்சர் தமிழ்நாடு திரும்பியதும் பேசிமுடிவெடுக்கலாம் என போக்குவரத்து ஊழியர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து சென்னையில் மாநகர பேருந்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து இன்று சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

The post போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: சென்னையில் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை.! appeared first on Dinakaran.

Related Stories: