மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தருக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் பெய்த கோடை மழையால் 500 ஏக்கரில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வின்னகுடி, குறவடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தருக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: