ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்டபம் தென் கடற்கரை நோக்கி வந்த பாம்பனைச் சேர்ந்த பைபர் படகை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். படகில் இருந்து தப்ப முயன்றவர்களை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரித்தனர். படகில் மறைத்து வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள உருக்கிய தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் ராமேஸ்வரத்தில் பறிமுதல்..!! appeared first on Dinakaran.