புகையிலை விற்ற 4 பேர் கைது

 

மதுரை, மே 31: மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய, போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மீனாட்சிபுரம், சத்யமூர்த்தி மெயின்ரோடு, கீழ வைத்தியநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த, மீனாம்பாள்புரத்தை சேர்ந்த பாண்டியன்(62), மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவகுமார்(40), தத்தனேரி எம்.ஜி.ஆர்.

தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி(65) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், வண்டியூர் மெயின்ரோடு, கவுண்டக்கல் தெருவில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொட்டலங்களை விற்பனை செய்து வந்த, இதே பகுதியைச் சேர்ந்த சந்திரா(56) என்பவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து, 30 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: