பைக் மீது கார் மோதி ஒருவர் பரிதாப பலி

செங்கல்பட்டு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ராஜா (44). இவர், நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். பாலூர் ரயில் நிலையம் அருகே, சென்றபோது, பின்னால், அசுர வேகத்தில் வந்த கார் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பைக் மீது கார் மோதி ஒருவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: