பைக் திருடியவர் விபத்தில் சிக்கி காயம்

 

விருதுநகர், மே 30: விருதுநகர் அருகே பைக்கை திருடிச்சென்ற நபர் விபத்தில் சிக்கி காயமடைந்தார். விருதுநகர் அருகே சென்னல்குடியை சேர்ந்தவர் தங்கபாண்டி(36). இவர் சனிக்கிழமை இரவு விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கடை முன்பாக பைக்கை சாவியுடன் வைத்துவிட்டு, பொருள்கள் வாங்க சென்றார். 10 நிமிடத்தில் திரும்பி பார்த்த போது பைக்கை காணவில்லை. மறுநாள் காலை மீண்டும் விருதுநகரில் தேடி உள்ளார்.

இந்நிலையில் பைக்கை திருடி சென்ற அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, ஆமத்தூர் அருகில் செல்லும் போது வாகன விபத்தில் சிக்கி காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலும், பைக் ஆமத்தூர் போலீஸ் நிலையத்திலும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஆமத்தூர் போலீசில் தங்கப்பாண்டி புகாரில் பைக்கை திருடி சென்ற கருப்பசாமியை கைது செய்தனர்.

The post பைக் திருடியவர் விபத்தில் சிக்கி காயம் appeared first on Dinakaran.

Related Stories: