கிணற்றில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்

 

திருப்புவனம், மே 30: திருப்பாச்சேத்தியில் விவசாய கிணற்றில் விழுந்து தத்தளித்த நல்ல பாம்பை, தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியில் நான்கு வழிச்சாலை அருகே சூர்யா என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச, மோட்டர் வசதியுடன் விவசாய கிணறு உள்ளது. நேற்று காலை சூர்யா வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்து மோட்டாரை ஆன் செய்துள்ளார். பின் கிணற்றில் பார்த்த போது, 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு தண்ணீரில் நீந்தியபடி இருந்தது.

இது குறித்து அவர் மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து. தண்ணீரில் விழுந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த பாம்பை அருகே உள்ள வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, பாதுகாப்பாக விடுவித்தனர்.

The post கிணற்றில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: