பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

சண்டிகர்: பஞ்சாபின் அமித்ரசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகே எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென டிரோன் ஒன்று வட்டமடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து உஷாரான வீரர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன் ஒன்று நுழைய முயன்றது. இதனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். டிரோனுடன் இருந்த 2.70கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: