அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கிக் கணக்கில் மாதத்திற்கு ரூ.1,500 ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்படும், படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள், புதிதாக 20 லட்ச வேலை வாய்ப்புகள், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ரொக்கம் ஆகிய வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இவற்றில் குறிப்பாக அனைத்து பெண்களுக்கும் உள்ளூர் பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்திய நிலையில், அதனை தொடர்ந்து கர்நாடகா, தற்போது ஆந்திராவிலும் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டை பின்பற்றும் ஆந்திரா!…சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு இலவச பேருந்து, மாதம் ரூ.1,500: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி!! appeared first on Dinakaran.