ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது; எல்.என்.எஸ். மோசடி வழக்கில் ரூ.9.82 கோடி பறிமுதல்: ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம்

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆருத்ரா கோல்டு டிரேடிங், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

எல்.என்.எஸ். மோசடி வழக்கில் ரூ.9.82 கோடி பறிமுதல்:

எல்.என்.எஸ். மோசடி தொடர்பாக 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.9.82 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவு பண மோசடி வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்தார்.

ஐ.எஃப்.எஸ். மோசடி வழக்கில் கவுன்சிலர் கைது:

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி செய்த வழக்கில் திருச்சியில் 17-வது வார்டு கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, ஆருத்ரா ஆகிய 3 வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர். நிதி நிறுவன மோசடி வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் ஐ.ஜி. ஆசியம்மாள் செய்தியாளர்களிடம் கூறினார்.

The post ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது; எல்.என்.எஸ். மோசடி வழக்கில் ரூ.9.82 கோடி பறிமுதல்: ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: