இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச், ‘சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராக தடை கோரும் அபிஷேக் பானர்ஜி மனுவை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு உறுதி ெசய்யப்படுகிறது. அதில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த ரூ. 25 லட்சம் அபராதத்திற்கு மட்டும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் முன் அபிஷேக் பானர்ஜி ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
The post அபிஷேக் பானர்ஜி மீதான மோசடி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.