இதையடுத்து கடந்த 22ம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ரம்யாவை, தனது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அவரது வீட்டுக்கே அனுப்பி விட்டார். திருமண போட்டோக்களை கேட்டபோது தரவில்லையாம். இதனால் ரம்யா தன்னை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தும்படி சுப்ரமணியனை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் என் வீட்டில் சம்மதிக்கமாட்டார்கள் என்று மறுத்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பே சுப்ரமணியனுக்கும், உறவினர் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிகிறது.
இது தெரிந்து ரம்யா, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் சுப்ரமணியனுக்கும், நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த ரம்யா அந்த வீட்டிற்கு சென்று நேற்று முன்தினம் இரவு விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மகளிர் போலீசார், சுப்ரமணியனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை பாதிரிகுப்பம் கோயிலில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த சுப்ரமணியன், மணக்கோலத்தில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காரில் வந்துள்ளார். அங்கு தயாராக காத்திருந்த போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். இதனால் இரண்டாவதாக திருமணம் செய்த பெண் கதறி அழுதபடி தன் பெற்றோருடன் சென்றுவிட்டார். சுப்ரமணியனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தர்ணா நடத்திய ரம்யாவையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
The post கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் விடியவிடிய காதலி தர்ணா 3 முடிச்சு போட்ட 3ம் நாளில் உறவினர் பெண்ணுடன் திருமணம்: மணக்கோலத்தில் மெக்கானிக் கைது appeared first on Dinakaran.